mercredi 22 mai 2013

வடக்கில் தேர்தல் நடத்தக்கூடாது என்று பௌத்த பயங்கரவாத அமைப்பு பொதுபல சேனா கூறியுள்ளது.


bbsராஜபக்ச குடும்பத்தினரால் அன்னிய சக்திகளின் ஆதரவோடு தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு வடக்கில் தேர்தல் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire