dimanche 2 novembre 2014

முத்த திருவிழாவை நடத்தியே தீருவோம்

கேராளவில் 02/ நவம்பர் முத்த திருவிழா கண்டிப்பாக நடக்கும் என குறும்பட இயக்குநர் ராகுல் பசுபாலன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது
அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாரதீய ஜனதா இளைஞர் அணி தொண்டர்கள் சமீபத்தில் சூறையாடினர்.
இதற்கு எதிராக குறும்பட இயக்குனர் ராகுல் பசுபாலன் தலைமையில் பேஸ் புக் சமூக வலைத்தள ஆர்வலர்கள் (சுதந்திர சிந்தனையாளர்கள்) போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இந்நிலையில் நாளை(நவம்பர் 2ம் திகதி), மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து, முத்தமிடும் திருவிழாவுக்கு ‘ஃபேஸ்புக்’ மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு பொலிஸ் தரப்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும், நாளை இத்திருவிழா நடக்கும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறும்பட இயக்குநர் ராகுல் பசுபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும் கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டிக்கும் வகையில் கைகளில் பதகைகளை ஏந்தியபடி, சுமார் 500 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire