dimanche 23 novembre 2014

தொழிலாளர்களை அடிமையாக பயன் படுத்திய உரிமையாளரை தொழிலாளர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர்

கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் ஆத்திரமடைந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தின் உரிமையாளரை வெட்டிக் கொன்றுள்ளனர்.
சம்பளப் பிரச்சனையிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.
சம்பளப் பாக்கி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, தோட்ட உரிமையாளர் வெளியில் இழுத்துவரப்பட்டு, வெட்டியும் தாக்கியும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வழமையில் மிகவும் குறைந்த ஊதியத்துக்கு வேலைவாங்கப்படுவதாகவும் பின்தங்கிய பகுதிகளில் மோசமான குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கவலைகள் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire