dimanche 9 novembre 2014

லண்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் நூறு வயது பாட்டி காதல் திருமணம்!

லண்டன்: லண்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் நூறு வயது பாட்டி காதல் திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நூறு வயது பாட்டி காதல் திருமணம்!தனது கணவரின் மரணத்துக்குப் பிறகு உறவுகள் கைகொடுக்காதததால் முதியோர் இல்லத்துக்கு வந்த மர்பா ப்ளோட்னிகோவா என்ற பாட்டி, அதே இல்லத்தில் வசித்து வந்த 60 வயதான அபனாசில் ஹரின் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
சுமார் 11 வருடங்களாக இவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இந்த காதல் ஜோடியின் திருமணம் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
பாட்டி ப்ளோட்னிகோவாவுக்கு அவ்வளவாக நடக்க இயலாது அவர் சர்க்கர நாற்காலியிலேயே வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire