vendredi 14 novembre 2014

சென்னையில் பரபரப்பு! 5 புலிகள் தப்பி ஓட்டம்!



சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 5 புலிகள் தப்பி ஓடியுள்ளன. இதில் 3 புலிகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். 2 புலிகள் தப்பி ஓடியுள்ளது. அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

கடந்த சில தினங்களாக பெய்த மழையை அடுத்து, புலிகளுக்காக கட்டப்பட்ட மதில் சுவர் இடிந்து விழுந்தது. மதில் சுவர் இடிந்து விழுந்ததால், புலிகள் தப்பித்து ஓடியுள்ளது. 

புலிகள் தப்பியோடியதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதியில் உள்ளவர்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் தப்பியோடிய 2 புலிகளை பிடித்துவிடுவோம், புலிகள் பூங்காவை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.புலிகள் தப்பியோடிய சம்பவம் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire