mercredi 22 février 2012

சீனா, ரஸ்யா, கியூபா, உறுதியளித்துள்ளன

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளில் ஐந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:36.03 AM GMT ]
எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே இவ்வாறு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

26 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்குமாறு சில நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire