mardi 7 août 2012

நாட்டிற்குக் குந்தகம் ஏற்படும்?எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளினால்

பாதுகாப்புச் செயலர் எச்சரிக்கை  

விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சி யோர் இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அவர்களால் நாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடும். எனவே படைவீரர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்­ தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடாவிலுள்ள விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற பைலட் அதிகாரியாக பயற்சி முடித்து வெளியேறி யோருக்கான பட்டம் சூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம் முடிபடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற் கொள்ள வேண்டும். இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியோர் செயற்பட்டு வருகின்றனர். நாட்டுக்குள்ளும் இவ்வாறு ஸ்திரத்தன் மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடக் கூடும். எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்த தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டியது அவசியமானது. யுத்தம் நிறைவடைந்துள்ள காரணத்தி னால், படையினருக்கு வழமையான கடமை களை விடவும் வேறு பொறுப்புக்கள் காணப் படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து சில காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­, உயர் படையதி காரிகளை வெளிநாட் டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானி கராலய ங்களில் கடமையில் ஈடுபடுத்தியுள்ளார். ஏனைய துறை களிலும் படையதிகாரி கள் மற்றும் படை வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வரு வதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­ தெரி வித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire