mardi 7 août 2012

எதிரெதிராக இருமேடைகளிட்டுவிவாதிப்போம். எம்மோடுஅரசியல்பேச கூட்டமைப்புதயாரா? தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தலைவர் சவால்.




இருமேடைகளை எதிர் எதிராக அமைத்து கூட்டமைப்பினரோடுவிவாதிக்க நாம் தயாராகவே உள்ளோம். கூட்டமைப்பினர் தயாரா? என்றுசவால் விடுத்தார். த.ம.வி.பு.கட்சியின தலைவர்.
 
நேற்றுசித்தாண்டிசித்திரவேலாயுதசுவாமிஆலயமுன்றலில் இடம் பெற்றஅரசியல் கூட்டத்திலேயேஅவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
வரலாற்றுச் சிறப்புமிக்கஆலயமண்ணில் நின்றுஎம்மக்களோடுஉரையாடக்கிடைத்ததையிட்டுமகிழ்சியடைகிறேன்.
 
ஜனநாயகவழியில் 30வருடகாலப்போராட்டம்,ஆயுதவழியில் 30 வருடகாலப்போராட்டம் இப்படி 60 வருடங்களுக்கும் மேலாகஎமக்குதலைமைதாங்கியவர்கள் எமக்குஎதனைப் பெற்றுக் கொடுத்தனர்?
மனிதனைக்கண்டுமனிதன் ஓட்டம்,பச்சைஉடைகளைக்கண்டால் ஓட்டம்,சிங்களச் சத்தம் கேட்டால் ஓட்டம்,கண்கள் மூடினாலும் தூக்கம் கண்களைநெருங்காதஎத்தனை இரவுகளைபயந்துகடந்துவந்திருக்கிறார்கள் எமதுமக்கள். இந்தகெட்டவேதனைகளைமீண்டும் நாம் எமதுமக்களுக்காகபரிசளிப்பதா?
2008ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டோம்.பிரிக்கப்பட்டவடக்குகிழக்குபோட்டியிடுவதுவடக்குதமிழருக்குநாம் செய்யும் துரோகம் என்றார் சம்பந்தன்.
 
ஆனாலும் நாங்கள் துணிந்துமாகாணசபையைகைப்பற்றியபின்னர் கிழக்குமாகாணசபையா?அப்படிஒருமாகாணசபை இருக்கிறதா? என்றுகேள்விகேட்டுஅறிக்கைகளையும் விட்டுஎம்மை தூற்றித்திரிந்த கூட்டமைப்பினர் 04 வருடங்கள் கடந்தநிலையில் அதேபிரிக்கப்பட்டகிழக்கில் முதலமைச்சர் பதவிக்காகதேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
 
2008ல் அவர்களுக்குதுரோகமாக இருந்தவிடயம் 2012ல் நியாயமாகப் போனதுஎவ்வாறு?
 
இணைந்தவடக்குகிழக்கு தமிழ்தேசியம் என்றகொள்கைகளைஅவர்கள் தூக்கிஎறிந்திருப்பதுஎதற்காக?தங்கள் கொள்கைபோனாலும் பரவாயில்லைதமதுகட்சிகளங்கப்பட்டாலும் சரிகிழக்குதமிழனின் புதியதலைமைத்துவத்தைஅழிக்கவேண்டும். ஏகப்பிரதிநிதித்துவம் பேசித்திரியும் எம்மைபொய்யர்களாகஅடையாளம் கண்டுகொண்டகிழக்குத் தழிழன் விழிக்கமுன்பாகவேஅவனைஒரேயடியாகஉறங்கவைக்கவேண்டும்.கிழக்குமக்கள் அரசியலில் தெளிவற்றமந்தைகளாக இருந்தால் தான் நாம் தொடர்ந்தும் அவர்களைமுதுகில் அடிபோட்டுமேய்க்கமுடியும் என்பதே இந்த அரசியல் முதலாளிகளின் எண்ணம்.
 
எமதுமக்கள் மந்தைகள் அல்ல. தெளிவுபெற்றமக்கள் சமூகம் அதனாலேயேஎம்மைஆதரிக்கிறார்கள். அவர்களுக்காகவேஆயுதம் ஏந்தினோம். அன்றுமக்களுக்காகவே ஜனநாயகதலைமையினையம் ஏற்றோம். நாம் உயிர்துறக்கவேண்டிவரினும் எம் உறவுகளுக்காகவேஉயிர் துறப்போம். 
தமக்குசவாலானதமிழ் தலைமைகளைசுயலாபம் கருதிஅழித்துவிடுவதே கூட்டமைப்பினர் அன்றுதொட்டு இன்றுவரைகடைப்பிடிக்கும் தந்திரோபாயம்.
 
தமிழீழ தேசியதலைவர் இறந்தபின்னர் இந்த கூட்டமைப்பினர் என்ன கூறினார்;கள்? புலித்தலைமை இருந்தபின் எம்மைசுதந்திரமாகசிந்திக்கவிடவில்லை என்றார்கள்.
வீதிகள்தோறும் எம் உறவுகளைடயர்களில்போட்டு எறித்துவெறியாட்டம் ஆடியவர்களோடுகொழும்பிலுள்ளசிங்களவர்களின் உணர்வுகளைத்தூண்டினால்  தமிழர்கள் பாரியவிழைவுகளைஎதிர்நோக்கவேண்டிவரும்.என்று கூறியதுமட்டுமன்றிசெயலிலும் காட்டியவர்களோடு புலிகளைஅழிக்கசாத்தானோடும் கூட்டுச்சேரத்தயாராக இருக்கின்றேன். என்றுமார்தட்டிய து.சு.ஜெயவர்தனவின் கட்சியினரோடு கூட்டுச்சேர்ந்து சூழ்ச்சிகளின் மொத்த வடிவம் ரணில்   விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்துசிங்கள தேசியகொடியைஏற்றிவைத்தவர். யார்? புலித்தலைமையைகூடவிருந்துமுள்ளிவாய்கால்வரைஅழைத்துச் சென்றுகுழிதோண்டிபுதைத்துவிட்டுநிம்மதிபெருமூச்சுவிட்டவர்கள். இந்த கூட்டமைப்பினரே.........தம்மைசுயமாகவேசிந்திக்கமுடியாமல் செய்தபுலித்தலைமைக்குசாவுமணியடித்துஉளப்பூரிப்போடுவாழ்நது;கொண்டிருக்கிறார்கள்.
 
அவர்கள் இலக்குநிறைவேறிவிட்டது. இப்போதுசுயமாகசிந்திக்கிறார்கள். நிம்மதியாகப் பெருமூச்சுவிடுகிறார்கள்.அடுத்ததாகஎமதுகிழக்குமண்ணின் தலைமையையும் குழிதோண்டிபுதைக்ககளமிறங்கியிருக்கிறார்கள். அவர்களின்அடுத்த இலக்குநாம்தான்.பிள்ளையான் ஒருவனைஅழித்துவிடவேண்டும். என்பதற்காகவேகொள்கைகளையும் தூக்கி எறிந்தார்கள் இந்தகுள்ளநரிகள்.
 
இறுதியுத்தத்தின்போது இவர்கள் பதவிதுறந்தார்களா? போர்க்குற்றவாளியானபொன்சேக்காவுக்குவாக்களிக்கச் சொன்னார்கள்.  மக்கள் முன்னால் வீரவசனம் பேசிவிட்டு ஐ.நாவில் போர்க்குற்றபிரேரனைவாக்கெடுப்புநடந்தபோதுஅதிலும்கூடகலந்தகொள்ளாமல் ஒளிந்தகொண்டடார்கள்.ரயணிலுடன் கைகோர்த்துசிங்கக் கொடியைஏற்றிவிட்டுகாளிஅம்பாள் பக்தன்நான் அதனாலேயேசிங்கவாகனம் இடம்பெற்றகொடியினைஏற்றிவைத்தேன் என்று கூறினார்கள். அவர்கள் செய்தால் ராஜதந்திரம்? நாங்கள் செய்தால் துரோகத்தனம்? இன்னும் எத்தனைநாள்தான் ஏமாற்றுவார்கள்? இறுதித் தீர்ப்புநாள் நிச்சயம் இருக்கிறது. இந்தபுல்லுருவிகளைஎமதுமக்கள் அடையாளம் கண்டகொண்டார்கள். எமக்குசொந்தமான மூளையும், இதயமும் இன்னும் எம்மிடத்திலேதான் இருக்கிறன.
 
எமக்காக யாரும் சிந்திக்கத்தேவையில்லை. எம்மை நாமேஆள்வோம் வெற்றிநிச்சயம்

Aucun commentaire:

Enregistrer un commentaire