dimanche 15 juin 2014

போர் புரிய தயார் : அல் கொய்தா மிரட்டல் இந்தியாவிற்கு

ஈராக் மற்றும் சிரியாவைப் போன்று இந்தியாவிற்கு எதிராக போர் புரிய வேண்டும் என்று  அல் கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா மூத்த தலைவர் அசிம் உமர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், காஷ்மீரை மீட்க ஆப்கனிலிருந்து வீரர்கள் வர உள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் 2010ம் ஆண்டில் காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டதில் உயிரிழந்த இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் படங்கள் உள்ளன. புனித போருக்கு உலக அளவில் போராட்டங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள அந்த காட்சியில், இந்தியாவிலும் அதனை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஐரோப்பாவிற்கு எதிராக போர் புரிய தயாராகுமாறும் அந்த வீடியோவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அல் கொய்தா வீடியோ காட்சிகளை தொடர்ந்து காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire