dimanche 1 juin 2014

இலங்கைக்கு கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுக்கோ உரிமையில்லை;ஸ்ரீபாலா டிசில்வா

லங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், டிசில்வா இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுக்கோ உரிமையில்லை. 
இலங்கை பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வுக் குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கை பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறகூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று.
ஆகையால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியது. அதற்கு அப்போதே எதிர்கட்சியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது, என்று டிசில்வா கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire