dimanche 1 juin 2014

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போதே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்தது .
இந்த நேர்முகத் தேர்வில் , குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 44 பேர் தோற்றிய போதிலும் அவர்களில் 37 பேர் மாத்திரமே தெரிவானதாக இராணுவம் குறிப்பிட்டது .
இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் , இராணுவத்தின் பொதுச் சேவையணி , இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கமர்த்தப்படவுள்ளனர் என்றும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது .

Aucun commentaire:

Enregistrer un commentaire