jeudi 26 juin 2014

அனுமதிக்காவிட்டாலும் மனித உரிமை விசாரணை நடக்கும் ...

கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித  உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில¢ இடம்பெறும்  நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம்  அறிவித்துள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க  முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய  முன்னாள் தலைவருமான அஸ்மா ஜகாங்கீர், பின்லாந்து நாட்டின்  முன்னாள் அதிபரும் நோபல் பரிசை வென்றவருமான மார்ட்டி அடிசாரி,  நியூசிலாந்தின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் கவர்னர்  ஜெனரலாக பணியாற்றிய சில்வியா கார்ட்வ்ரைட் ஆகியோர் நிபுணர்கள்  குழுவில் இடம் பெற்றுள்ளனர். விசாரணைக்கு இலங் கை அரசு  அனுமதிக்கா விட்டாலும், ஒத்துழைக்கா விட்டாலும், நபுணர் குழுவின்  விசாரணை அங்கு நடைபெறும் என்று ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அறிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 40  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும்,  பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் மீது மனித உரிமை  விசாரணை நடத்த, கடந்த மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை  கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்றியது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இருப்பினும், மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க பல்வேறு  நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவை ஐ,நா மனித உரிமை  கவுன்சில் அமைத்துள்ளது. இக்குழு இலங்கைக்கு சென்று விசாரணை  நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க இலங்கை  அதிபர் ராஜபக்சே மறுத்து விட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும், நிபுணர் குழு  இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது,  விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று அரசு தீர்மானத்தை  நிறைவேற்றியது. இதனிடையில் நிபுணர் குழுவினர் பெயர்களை நவநீதம்  பிள்ளை நேற்று அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த சவாலான இந்த விசாரணையை நடத்த,  நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த  மூன்று பேரும் தமது நிபுணத்தன்மை, அனுபவத்தின் மூலம்  ஒருங்கிணைந்த, சுதந்திரமான, பாகுபாடற்ற விசாரணையை  மேற்கொள்வார்கள் என்று முழுமையாக நம்பலாம். இவர்களுக்கு  உதவுவதற்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள  விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை விசாரணை செய்யும். இந்த  நிபுணர் குழு விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று  இலங்கை அறிவித்துள்ளது. அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும்  விசாரணை தொடர்ந்து நடைபெறும். இருப்பினும், உண்மையை  வெளிச்சத்துக்கு கொண்டு வர இலங்கை அரசும், அதன் மக்களும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire