dimanche 20 juillet 2014

5 வருடமாக எனது சொல்லை யார் கேட்கிறார்கள்? : ஆனந்தசங்கரி

தனிநாட்டு பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்துடன் பேசி பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வையுங்கள். இதை நான் கடந்த 15 வருடமாகக் கூறி வருகிறேன். எனது சொல்லை யார் கேட்கிறார்கள். இதை அன்றே கெளரவமாகச் செய்திருந்தால் இன்று நீதிமன்றம் சென்று சத்தியக்கடதாசி வழங்கி ஐயோ நாங்கள் தனி நாடு கேட்க வில்லை என்று கூற வேண்டிய தேவை இருந்திருக்காதே.
அனுபவப்பட்ட பின்னர் கூட எனது கருத்தைக் கேட்பதில் தமிழ்க் கூட்டமைப்பினருக்குக் கசப்பாகவே உள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தவைர் வி. ஆனந்தசங்கரி தெரி வித்தார். எது எப்படியிருப்பினும் இனியாவது உண்மையான இதயசுத்தியுடன் அரசுடன் பேசி தமிழர் பிரச்சினை தீர வழிசெய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire