jeudi 10 juillet 2014

சட்டக்கல்லூரி மாணவி பூரண மதுவிலக்குக்கோரி உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குக்கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் உண்ணாவிரதம் இருக்க புதூரில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டார்.அப்போது அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உண்ணாவிரதம் இருக்க உரிய அனுமதி இல்லை. எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறினார்.ஆனால் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஏற்கனவே மது விலக்கு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire