mardi 15 juillet 2014

மட்டக்களப்பு கோட்டைமுனை கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (14.07.2014) நடைபெற்றது.
 
கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
 
சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இமட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்இமண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமாரன்இகல்வி வலய பொறியியலாளர் கிருஸ்ணதாஸன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
75 இலட்சம் ரூபா செலவில் இந்த இரண்டுமாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
 
கனிஸ்ட வித்தியாலயத்தில் கடந்த காலத்தில் கடும் இடநெருக்கடி நிலவி வந்த நிலையில் இடப்பிரச்சினை இதன் மூலம் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire