jeudi 2 janvier 2014

இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை


தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள நாகியம்பட்டி பகுதியில் இலங்கை அகதி முகாம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த ஞானகுமாரி (வயது 24) வசித்து வந்தார்.இவருக்கும், மனோஜ்குமார் என்பவருக்கும் கடந்த 7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனோஜ்குமார் டெல்லியில் மத்திய ரிசர்வ் படையில் பொலிஸ்காரராக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ்குமார் விடுமுறையில் வீட்டிற்கு வந்து இருந்தார்.இந்த நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று (01) காலை வாய்தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். முகத்தில் தலையணை வைத்து அமுக்கியதில் ஞானகுமாரி மயங்கி விழுந்து விட்டார். இதை அறிந்த அவரது கணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.ஞானகுமாரி மயங்கி கிடந்ததை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை உடனே தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர். இங்கு அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் அவர்கள் இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி பொலிஸில் புகார் செய்தனர். இதன் பேரில் பொலிஸார் விசாரிக்கிறார்கள்.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire