mardi 14 janvier 2014

எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேல் மாகாணசபைக்கான தேர்தலின் மூன்று மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேல் மாகாணசபைத் தேர்தலில் மரச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில,;; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகித்த போதிலும், 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்காமை மற்றும் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்கள் நடாத்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire