jeudi 2 janvier 2014

புலிகளின் ஆதரவு நடிகராக வளம் வரும் ராதிகா கனேடிய ஊடகங்களுக்கு அறிக்கை

சிறிலங்காவில் தாம் அரசியல் ரீதியான மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் நேற்று கனேடிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவேன் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

தாம் பிறந்த நாட்டை அறிந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, ராதிகா சிற்சபேசனுடன் தொலைபேசியில் உரையாடிய அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் டேவர், ராதிகாவை சிறிலங்கா அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், புத்தாண்டு நாளான கனடாவின் மூத்த அரசியல் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire