jeudi 13 décembre 2012

இந்திய விமானப்படை அதிகாரிகள் குழு சிறிலங்காவில்

சிறிலங்கா – இந்திய விமானப்படைகளுக்கு இடையில் மூன்று நாட்களாக நடந்து வந்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் நேற்று முடிவுக்கு வந்துள்ளன. 

சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சுக்கள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருந்தன. 

இந்திய விமானப்படையின் நடவடிக்கைத் தலைமையக உதவித்தளபதி எயர் வைஸ் மார்சல் உப்கர்ஜித்சிங் தலைமையில் 5 அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர். 

சிறிலங்கா விமானப்படையின் தரப்பில் நடவடிக்கைப் பணிப்பாளர் எயர் மார்சல் புலத்சிங்கள தலைமையில் 6 அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாட்டின் கீழ், இருநாட்டு முப்படைகளினதும் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்டுதோறும் இத்தகைய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire