mercredi 26 décembre 2012

25 வீதத்தால் அதிகரிப்பு!மக்களின் கடன் சுமை

இலங்கையில் தனிநபர் ஒருவருக்கான கடன் சுமை 25 வீதத்தால் அதிகரித்துள்ளது. என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

   கடந்த வருடம் இந்தத் தொகை 245,980 ரூபாவாக இருந்தது. தற்போது அது 308,171 ரூபாவாக அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் என்ற அடிப்படையில் இலங்கை அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை மொத்த சனத்தொகையால் வகுத்த நிலையிலேயே இந்தத் தொகை கணிப்பிடப்பட்டுள்ளது.

   இலங்கையின் சனத் தொகை 2012 ஆம் ஆண்டில் 20, 277, 597 ஆகும். இந்தநிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 5133 பில்லியன் டொலர்களாகும்.

   இது கடந்த 8 மாதகாலப் பகுதிக்குள் 1,115.6 பில்லியன் தொகையில் இருந்து 6,248.9 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. 

   இதில் உள்நாட்டுக்கடன் 449 பில்லியன்களால் 16 வீதம் அதிகரித்து, 3,253 பில்லியன் களாக உயர்ந்துள்ளது.

   வெளிநாட்டுக் கடன்கள் 666.5 பில்லியன்களில் இருந்து 28.6 வீதமாக அதிகரித்து, 2, 995.8 பில்லியன்களாக அதிகரித்துள்ளன.

   பொருளியல் நிபுணர்களின் கருத்துப்படி, நாட்டின் ஏற்றுமதி வருமானம், கடந்த 9 மாதங்களில் 8.3 வீதத்தால் அதிகரித்தபோது இறக்குமதி செலவுகள் 11.2 வீதத் தால் அதிகரித்தன. 

   இதன் காரணமாக அரசின் கடன் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கள் குறிப்பிட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire