samedi 22 décembre 2012

உண்ணாவிரதப் போராட்டம் அரசியலுக்காகவே இந்த உணவுத்தவிர்ப்பு

தந்தை செல்வா சதுக்கத்தை செலவின்றி துப்பரவு செய்ய தமிழரசுக்கட்சி கண்டு கொண்ட புதிய வியூகமே இன்றைய போராட்டம் இவர்கள் மாணவர்களுக்காக போராடவில்லை தமது அரசியலுக்காகவே இந்த உணவுத்தவிர்ப்பு ஆர்ப்பாட்டம் என பொதுமக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும் போது உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தருந்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று.
உண்ணாவிரதப் போராட்டம் என தகரப்பந்தலில் இருந்து விட்டு போகநினைத்து வந்த 36 பேர் அடங்கிய கும்பலுக்கு தலையில்லாமல் கால் மட்டுமிருந்து அதிர்ச்சி கொடுகத்து போராட்டக்களம்.
உண்ணாவிரத போராட்டம் என்ற போர்வையில் வந்தவர்களுக்கு தமிழர்களது வலி என்ன என உணர்த்தியது போராட்டக்களம் காரணம் இவர்கள் இளைப்பாற தற்காலிகமாக போடப்பட்டிருந்த தகரப்பந்தலின் தகரங்களை இரவோடு இரவாக கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்து தமிழர்களது வலியை புரிய வைத்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று.
9பது கோரிக்கையை முன்வைத்து தழிழரை ஏமாற்ற தமிழர், தமிழ் மக்கள் என வாய்பேச்சில் சொல்லில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்கள் இன்று ஒருநாள் ஆவது வெயில்க்காய்ந்து பாருங்கள் தமிழர்களது வலிஎன்னவென.

உண்ணாவிரதத்திற்கு வந்தவர்கள மாணவரைப்பற்றி சிந்திக்காமல் உண்ணாவிரதம் தொடர்பில் தாம் கொடுத்த செய்தி அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொணடிருந்தனர் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிறிதரன்,மற்றும் தமிழ்ரசுக்கட்சியின் நகரசபை தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள.

36 பேர் மட்டுமெ கலந்து கொண்டிருந்தஇந்த ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் தாய், தந்தை, உறவுகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க பொருட்கள் கொள்வனவு செய்யும் முன்னாள் முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேற்கொண்டுவருகின்றார்.
வெல்லாவெளி மற்றும் வவுணதீவு பிரதேச மக்களுக்கு பாய், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவரது ஊடக இணைப்பாளர் A.தேவராஜன் தெரிவித்தார்.
இவர் தனது  சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொருட்களை இன்றும் நாளையும் நேரடியாகச் சென்று வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.கிராம மக்களுக்கு நிவாரண உதவி
 கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஓர் கிராமம் இருக்கா? என்று தெரியுமோ தெரியல என்கின்றார்கள் பிரதேச வாசிகள்.  அரியநேந்திரனாவது போய் பார்க்கிற இல்லையா? றோட்டில நின்று போட்டோக்கு மாத்திரம் போஸ் கொடுத்தா போதாதுடா சாமிங்களா............இதுவா சிறூபில்லை வேலான்மை வீடு வந்து செராதேன்பது 

Aucun commentaire:

Enregistrer un commentaire