mardi 17 novembre 2015

தமிழ் மக்கள் வடுலைப்புலிகள் தலைவர் ரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிகாந்.

தமிழ் மக்கள் வடுலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபன்(ரகு) அவர்கள் கொலை செய்யப்பட்டு இன்று 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவரது கொலை தொடர்பில் எவ்வித விசாரனைகளும் நடைபெறாதுள்ளது. நல்லாட்சி நடைபெறுவதாக கூறிக்கொள்ளும் அரசாங்கம் எமது தலைவரான சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தனை கைதுசெய்து எமது கட்சியை முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்தஆட்சியில் கொலை செய்யப்பட்ட எத்தனையே சமபவங்ள் உண்டு அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னால் தலைவரும் எனது சகோதரருமான நந்தகோபனின் (ரகு) விசாரனைகளும் நடத்தப்பட வேன்டுமென கேட்டுக்கொண்டார்.
ரகு கொலை செய்யப்பட்ட 7வது நினைவுநாள் மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று பிரதித்தலைவர் யோகவேள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இன்நிகழ்வில் கடசியின் பிரதித்தலைவரும், மாணசபை உறுப்பினருமான திரு.திரவியம்(ஜெயம்) பிரதிச்செயலாளர் ஜேர்ஜ்பிள்ளை,பொருளாளர் தேவராஜா, மற்றும் முக்கிய உறுப்பினர்களும் கட்சித்தொண்டர்களும்,பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire