சீன பிரதிப்பாதுகாப்புச் செயலாளர் குழுவினரை 512 வது படைப்பிரிவின் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் சீன பிரதிப்பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான குழவினர் யாழ். கோட்டையைம் பார்வையிட்டனர்.
பின்னர் குழுவினர் வானூர்தி மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர்கள் விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகின்ற போதும் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இக்கவில்லை. அக்குழுவில் பாதுகாப்பு விவகார அதிகாரிகளுடன் சீன உளவுக்கட்டமைப்பு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
தலைமன்னாரினை அண்டிய திட்டிப்பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தையண்டி சீன தளங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் இக்குழுவினரது பயணம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire