நாளொன்றுக்கு தேவையான தேயிலை நிறையை விட மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 3 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த கூட்டொப்பந்தம் ரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கணக்கில் எடுக்கவில்லை என்றும் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்காத தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன.
தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்ற திட்டத்திலேயே பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் மூன்று தொழிற்சங்கங்களும் செயற்பட்டுள்ளதாக எதிர்ப்பு-தொழிற்சங்கங்கள் விமர்சிக்கின்றன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இதொகா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களும் மறுக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire