jeudi 16 février 2017

கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி


தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சூழ்நிலைப் பற்றி அவ்வப்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய அவரது டுவிட்டர் பதிவில்,
“திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே
குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும்
நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருந்தது?என்றால்
ஜனமாவது நாயகமாவது” என்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் இவ்வாறு பதிவு செய்திருப்பது சரியாக மக்களுக்கு தெரியாத வகையில் இருப்பதை தொடர்ந்து மக்களுக்கு புரியும் வகையில் டுவிட் செய்கிறேன் என்று மீண்டும் அந்த கருத்தை சென்னை வழக்கு சொல்லால் பதிவிட்டிருந்தார்.
“திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானம
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?”
கமலின் ட்விட் புரியாததால் ட்வீட் பக்கத்தில் அவரை பின்தொடரும் வாசகர்களே அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளனர். “திருடின்னு தீர்ப்பு வந்ததும் துரத்திருக்க வேண்டாமா, நின்னு நிதானமா சபதம்லாம் போட்டு மெல்ல கௌம்புதுனு ஆதங்க படுறார் தலைவர்..” என்று கமலின் டுவிட்டை விளக்கி தெரிவித்துள்ளார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire