dimanche 27 octobre 2013

புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது.- கன்னியமர்வில் கமலேந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில்இருந்தவற்றை இழந்தோமே தவிர எதையும் பெறவில்லை எனவடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்தெரிவித்தார்இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வடமாகாணசபையின் கன்னியமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்எமது மக்களின் அரசியல்உரிமைகளுக்காகவும்விடுதலைக்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம்செய்த அத்தனை போராளிகளையும் பலியாகிப்போன எமது மக்களையும்நினைவில் வைத்துக்கொண்டு எனது கன்னியுரையினை நிகழ்த்துவதில்பெருமையடைகின்றேன்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்குமாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதை முதல்கட்டமாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகஅமுல்படுத்துவதை கட்டங் கட்டமாக நகர்த்தி தீர்வு நோக்கி முன்னேறவேண்டும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோதுபுலிகளின்அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமேபலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்தவாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்டவடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாகவும்இலட்சங்களாகவும்அதிகரித்து இருக்காதுடன்ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் இங்கேநிகழ்ந்திருக்காது.
வடக்குகிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணமாகவும் பொலிஸ்,காணி அதிகாரங்களும் இந்திய அரசின் பக்கபலமும் இந்தியாவின்உயர்தரமான உதவியும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அந்தபொற்காலத்தினை புலிகள் தூக்கி எறிந்ததுடன்பொறுப்பெடுத்தவர்கள்துஷ்பிரயோகம் செய்தார்கள்.  
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மாகாண சபையிலிருந்து நாம்உரிமை இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிவந்துள்ளோம். எமது நிலைப்பாட்டை மாறி மாறி வந்த இலங்கைஜனாதிபதிகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியும்வந்துள்ளோம்.
எம்மோடு தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறந்த புத்திஜீவிகளையும்இழந்துள்ளோம். அவர்களின் தியாகமும்எமது நம்பிக்கை மிகுந்தபோராட்டமும் இன்று நனவாகியுள்ளது.
இந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றில் எனதுஉரையினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் இந்த மாகாணசபை ஊடானஆட்சியும் ஆளுமையும் எமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்குவித்திடும் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அத்தகையபயனுள்ள திட்டங்களை ஆதரித்து தமிழ் மக்கள் பயன்பெறச்செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு.
நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கானமுன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும்சமூகத்தில்எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ்இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பைஏற்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமானநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீதுசுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்குஉட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல்உள நலன் சார்ந்தவழிகாட்டுதல்கள்சிகிச்சைமுறைகள்நலனோம்பும் செயற்பாடுகளைஎமது சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.
இயற்கை வளம் செழித்த எம் பிரதேசங்களில் கைத்தொழில்விவசாயம்,என்பவற்றை ஊக்குவித்து மக்களுக்கு வருமானத்தையும்வேலைவாய்ப்புக்களையும் உள்வாங்கும் நிலைகளைத்தோற்றுவிப்பதற்கும்உள்ளுர் உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின்உதவியுடன் பெருக்கவும்உற்பத்தித் தொழில்பேட்டைகளை நிறுவிஏற்றுமதி தொழில் வாய்ப்பை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும்நாம் முன்னின்று உழைக்கவேண்டும்.
எமது மக்கள் தமது தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்குஏற்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் ஊடாக இலகு கடன்களைஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களது நடைமுறை வாழ்வுக்கானதொழிற்துறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன்வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம்இந்த வழிகள் நம் மக்களைசுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும்.
கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியானசூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்தநிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம்ஏற்படுத்த வேண்டும். யுத்தத்தினால் எமது சிறார்கள் பலர் தம் கல்வியைமுறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதாரகாரணங்களினாலும்யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்கள் காரணத்தினாலும்கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள்.
கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்குஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கானமூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கானஆயத்தநிலைகளை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
நிரந்தரமானதும்கௌரவமானதுமான அரசியல் தீர்வு நோக்கியபயணத்துக்கு வடமாகாண சபையை நாம் முன் நகர்த்திச் செல்லவேண்டும். இந்த முயற்சியில் சகோதர முஸ்லிம் மக்களோடுஇணக்கப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதோடுபெரும்பான்மை சிங்களமக்களிடமும் எமது உரிமை கோரிக்கையின் நியாயங்களை தெளிவுபடுத்தநாம் உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire