jeudi 31 octobre 2013

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன்: வாசு­தேவ நாண­யக்­கார

அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ் மக்­க­ளா­கட்டும் அனை­வரும் சுய­வி­ருப்­ப­தோடு எங்கும் வாழலாம். அதனை தடை­செய்ய முடி­யாது என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். வடக்கில் மக்கள் வாழும் இடங்­களில் இரா­ணுவ நடமாட் டத்தைத் தடை­செய்ய வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,
சிங்­கள மக்கள் தமது வர்த்­தகம் மற்றும் தொழில்கள் நிமித்­தமும், சுய­வி­ருப்­பத்­து­டனும் வடக்கில் குடி­யே­று­வதை தடுப்­பதும் எதிர்ப்புத் தெரி­விப்­பதும் ஏற்­றுக்­கொள்ள முடி யாதது.
முத­ல­மைச்­சரின் அந்த நிலைப்­பாட்டை எதிர்க்­கின்றேன். வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக அவ்­வா­றான ஒரு நிலை உரு­வானால் தெற்­கிலும் தமிழ் மக்கள் வந்து குடி­யேற முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புக்கள் கிளம்பும்.
இது மீண்டும் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும். இன­வா­தத்­திற்கு சாத­க­மாக அமைந்­து­விடும்.
எனவே, சிங்­கள மக்கள் தமது சுய­வி­ருப்பின் பேரில் வடக்கில் மட்­டு­மல்ல எங்கும் வாழ­மு­டியும். அதே­போன்று தமிழ் மக்­களும் தமது சுய­வி­ருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடை­போட எவ­ருக்கும் அதி­காரம் இல்லை.

அர­சாங்கம்

ஆனால், அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வடக்கில் தொகை தொகை­யாக சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க்கின் றேன்.
அதே­போன்று, தமிழ் மக்­களை சிங்­களப் பிர­தே­சங்­களில் குடி­யேற்­று­வ­தையும் எதிர்க்­கின்றேன். வடக்கில் மக்கள் குடி­யி­ருக்கும் பிர­தே­சங்­களில் இரா­ணு­வம நட­மா­டு­வதை தடை­செய்ய வேண்டும்.
இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளுக்­கு­ரிய இடங்­களில் இருக்க வேண்டும். அத்­தோடு, சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தினரின் தலை­யீட்டை இல்­லாது செய்ய வேண்டும். தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரி­வினர் நட­மா­டலாம். ஆனால், இரா­ணுவச் சீரு­டை­யுடன் மக்கள் மத்­தியில் நட­மா­டு­வ­தென்­பது, மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும், தாம் இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் சிக்­கி­யி­ருக்­கின்றோம் என்ற உணர்வை ஏற்­ப­டுத்தும்.
வடக்­கிற்கு இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை வழங்­கி­யுள்­ளது. அதனை சுவா­சிக்க மக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

பொலிஸ் அதி­காரம்

எந்­த­வொரு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே, வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும் அதே நிலைதான்.
பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வதா? இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்.

ஆளுநர்

இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire