samedi 5 décembre 2015

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்

சிட்னி: ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்திய பெருங்கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் நிபுணர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தெற்கு இந்திய பெருங்கடலில் இன்று காலை 6.24 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து சுமார் 3100 கிமீ தொலைவில், ஹியர்டு தீவுக்கு 1000 கிமீ தொலைவிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் இந்திய கடற்கரைக்கு தென் கிழக்கே தெற்கு இந்திய பெருங்கடலில் ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஆஸ்திரேலியாவுக்கு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire