samedi 23 mai 2015

மாவோயிஸ்ட் அமைப்பினர் இனி சுதந்திரமாக கேரளாவில் சுதந்திரமாக நடமாடல்லாம்

230115kerala-hc[1]மாவோயிஸ்ட்டாக இருப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மாவோயிஸ்ட் என்கிற பெயரில் வன்முறையில் இறங்குவதுதான் குற்றம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Being a Maoist not a crime: Kerala HCகேரளாவில் சியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நீதிபதி முகமது முஸ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மாவோயிஸ்ட்களின் கொள்கைகள், நமது அரசியலமைப்புடன் ஒருங்கிணைக்க முடியாத பட்சத்திலும், மாவோயிஸ்டாக இருப்பதே குற்றம் அல்ல என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். ஆனால் ஒரு தனிப்பட்ட நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம் ஆனால் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில், சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire