samedi 23 mai 2015

பத்தர்கள் புடை சூழ ஆளுநர் ரோசையா தேவாரம் படிக்க நகை வேண்டாம் என்ற நடிகை பதவிக்குமட்டும் ஆசைப்பட்டு பதவி ஏற்பு

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 10.37: மணி காலை 10.37 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். வழி நெடுக அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 11 மணி: காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். பதவியேற்க உள்ள அமைச்சர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
பின்னர் வந்த ஆளுநரை ஜெயலலிதா பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
காலை 11.09 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி உள்பட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire