mardi 15 septembre 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமைகள் விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டன என்று

mahinda-rajapaksha (1)உலகின் மனித உரிமை விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி 
மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் சில நாடுகளின் தற்போதைய நிலைப்பாடு மனித உரிமை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டி யுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஒரு கட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை கள் கோரி வந்த அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசார ணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இருந்தால் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் சர்வதேச சுயாதீன விசார ணையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறையை தற்போது ஆதரிக்கும் தரப்புக்கள் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் அணுகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire