mardi 8 septembre 2015

காந்தியை சுட்டு கொள்ள எப்படி இத்தாலி துப்பாக்கி கிடைத்தது;சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் மகாத்மா காந்தியை கோட்சே சுட்டு கொன்ற போது, அவன் பயன்படுத்தியது இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெரட்டா பிஸ்டல் ஆகும். இதை பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ரக துப்பாக்கி ஆகும்.
 
அப்படியானால், அந்த துப்பாக்கியை கோட்சேவுக்கு கொடுத்தது யார்? அதை கோட்சே எப்படி பெற்றார்? இந்த விவகாரம் மர்மாக உள்ளது. இது குறித்து இன்னும் விசாரணை நடத்தவில்லை.
 
காந்திமீது கோட்சே 3 குண்டுகள் மூலம் சுட்டார். ஆனால் 4 குண்டுகள் இருப்பதாக ஒரு சில செய்தி ஏஜென்ஸிகள் கூறுகின்றன. ஆனால், விசாரணையில் 3 குண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. 4 வது குண்டு எப்படி வந்தது? காந்தியின் இதய பகுதியை துளைத்த குண்டு எது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
மேலும், காந்தியை கொல்லும் நோக்கத்தில், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி நாட்டு குண்டு வைத்திருந்ததாக கேட்சே கைது செய்யப்பட்டார். பின்பு ஜனவரி 22 ஆம் தேதி மவுன்ட்பேட்டனால் விடுதலை செய்யப்பட்டார்.
 
எனவே, இது போன்ற சந்தேகங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சரியான நேரத்தில், சரியான இடத்தில் கோரிக்கை வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire