vendredi 13 février 2015

காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு 63 பேர் கைது

திருப்பூர்:காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்யக்கோரி, திருப்பூரில் நேற்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக, இந்து முன்னணி சமையல் கலைஞர்கள் சங்கத்துக்கு முன், கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்பகுதியில், 'சீர்திருத்த திருமணம்' என பேனரும் கட்டியிருந்தனர்.அங்கு வந்த தெற்கு போலீசார், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தாமு, கோட்ட செயலாளர் செந்தில்குமார் உட்பட, 63 பேரை கைது செய்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire