jeudi 19 février 2015

ஆயுதப் போராட்டத்தை எப்படி ஒடுக்கமுடியும் என்பதையும் ஏகாதியபத்தியமே கற்றுக் கொடுத்தது

சிந்தியுங்கள்! ஒன்றுபடுங்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்! வெள்ளை நிறத்தைக் கண்டால் –பதறி வெருவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா! (பாரதி)
பாரதியின் பாடலை படிக்கும் பொழுது எப்படி எங்கள் சுதந்திர உணர்வுபற்றி எனக்கு இப்பொழுதுதான் விளங்குகின்றது எங்கள் போராட்டம் சுதந்திரப் போராட்டமில்லை என்பதை காலம் கடந்த ஞானத்தினால்.என் தேசத்தையும் என் சனத்தையும் அழிப்பதர்காகவா நாம் போராடினோம்.அறியாமையை போக்க அறிவைக் கற்றுக் கொள்ளாதவரைக்கும் ஆயுதம் எம்மை அழிக்கும் எண்பதர்க்கு பாரதியன் பாடல் நல்ல உதாரணமாகும்.
அதே போல புதுகவிதையின் பிதாமகன் மேத்தாவும் இப்படி சொல்லுகின்ரார்.அடித்துக் கொள்ளுங்கள் ஆனந்தமாக! ஆயுதம் வேண்டுமா‘?அள்ளித் தருகின்றோம்!
அப்படிப்பட்ட காலங்களில் நான் பங்குகொண்ட சில பாசறைகளில் சீனா கம்யூனிஸ் கட்சியின் கூட்டங்களிலும் பாசறைகளிலும் நான் கலந்து வியட்நாம் போராட்டத்தை ஆதரித்து சர்வதேச ஏகாதிபத்தியங்களை கண்டித்து கண்டன பேரணி நடத்திய ஊர்வலங்களிலும் உளூர் சாதிய போராட்டங்களிலும் பங்கு கொண்ட நாம் அதுமாத்திரமல்ல மேதினம், யாழ்குடாநாட்டு தேர்தல் வெற்றிபெற்றவர்களின் வெற்றிக்கொண்டாட்டங்களிலும் பங்குகொண்ட நாம் எது போராட்டம் எண்பதை கற்றுக் கொள்ளத்தவறியதின் விளைவே தமிழீழப் போராட்டத்தில் சகல இயங்கங்களிலும், பொது மக்களும் அழிக்கப்பட்ட மக்களின் எண்னிக்கை விண்னை தாண்டும் அளவிற்கு கிட்டதட்ட 50,000 பேர்வரும்.
இவற்றுக்கு யார் பொறுப்பு எடுப்பது இவற்ரை கருத்தில் கொள்ளாமல் ஏழுந்த மானமான தீர்மானத்தை கொண்டுவந்தது ஐக்கிய மில்லாத சமாதானத்தை விரும்பாத தமிழ் தேசியம் என்பதர்க்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே போதுமான சான்றாகும்.
ஈழத்தில் (வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இலங்கையிலும்) நடந்த போராட்டம் பற்றி என்ன என்று கேட்டால் மக்கள் சொல்லுவது 58 கலவரம், தனிசிங்களச் சட்டம், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் 77 கலவரம் ஜூலை 83 கலவரம் இவற்றைத்தான் சொல்வார்கள் ஆனால்
அது ஏன் நடந்தது என்றால் யாருக்கும் தெரியாது சிங்களவன் கூடாது அது மாத்திரம் நா கூசாது தமிழனால் சொல்லும் வார்த்தை இது மட்டும்தான்.
இப்பொழுது பல அறிவியல் வளர்ச்சி விஞ்ஞான வளர்சியிலுமா தடுமாற்றம்.2ம் உலகப்போருக்குப் பின் ஐ.நா.சபையை உருவாக்கி பின் ஏகாதிபத்தியம் ஒரு வல்லரசுக் கொள்கையுக்குள் கொண்டுவருவதர்க்காக உருவாக்கப்பட்ட போராட்ட முறைதான் பயங்கரவாதம் அழிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவிகள் அப்படிப் பார்த்தால் யாழ்ப்பானத்தில் அழிகப்பட்ட மக்களுக்கு யார் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் தமிழ்தலைமைக்கும் உண்டு.
அதைவிட்டு அடுத்தவனின் குற்றத்தை தண்டிக்க போனால் தான் தண்டனைக்கு உள்ளாகவரும் என்பதைப்புரிந்து கொள்ளாமல் குத்து மதிப்பு அரசியல் பேசினால் பாதிப்பு யாருக்கு வரும் என்று சிந்திக்கவேண்டும்.உலகத்தில் நடக்கின்ற நடந்த ஏகாதிபத்திய போராட்டங்களின் சூத்திரம்(கோட்பாடு,தத்துவம்)ஆப்கானிஸ்தானில் ஜிகாத்தை உருவாக்கி,முஸ்லிம் இளைஞரை போராட்த் தூண்டியபொழுது கொடுக்கப்பட்ட தரவு.:-பின்வருமாறு.
10 சோவியத்துருப்புக்கள் சோதனைச்சாவடியில்,அல்லது சுற்றிவளைப்பில் ஈடுபட்டால்
5,பேர் கொல்லப்படவேண்டும் 1 முஸ்லிம் போராளியால் 15-10=5 இவற்றுக்கு பயன்படுத்தும்
குண்டுகள் (துப்பாக்கி றவை)இதே போன்றுதான் இலங்கையிலும் மொசாட்டினால் இலங்கை
ராணுவத்துக்கும் புலிகளுக்கும் பயிச்சி கொடுக்கும் பொழுது வழங்கப்பட்ட தரவுகளும்
இவைதான் இவற்றுக்கு காரணம் தேடுவதிலும் பார்க்க தமிழ் தலைவர்களும்,இயக்கத் தலைவர்களும் தமது இனத்தை தாமே அழித்தோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு
தண்டனையை ஏற்றுக் கொள்வதே மனிதாபிமானமும்,பண்புமாகும்.50,000 மக்கள் அழிவுக்கு
பொறுப்பு கூறாமல் அடுத்த கட்ட தீர்மானத்துக்கு செல்வது தமிழர்களின் போகிலித்தனமாகும்.
அந்தவகையில் ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக எவர்வந்தாலும் யுத்தக்குற்ற தீர்மானம் நிறைவேற்ற முடியாது எப்படி குற்றவாளிகளினால் தண்டனை கொடுக்கமுடியும் என்பதை சிந்தித்து இனியாவது அரசியலை விட்டு ஏதாவது வேலைசெய்து வாழகற்றுக் கொள்ளுங்கள் .
இவ்வளவு காலமாக மக்களை ஏமாற்றியது போதும். அடுத்தபடியாக 1986ம ஆண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தை எப்படி ஒடுக்கமுடியும் என்பதையும் ஏகாதியபத்தியமே கற்றுக் கொடுத்துவிட்டு இன்று இனாழிப்பு என்று நீல் விடுவதும் உச்சக்கட்ட போகிலித்தனம் ஒரு தேசத்தில் வாழ்ந்த தமிழ் தேசிய இனத்தை அழித்து, நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அந்த மக்களுக்கு உரிமைக்கு கைகொடுப்பதானது குருடனுக்குப் பின்னால் போவதர்க்குச் சமமானதாகும்.
இயன்றவரை உண்மை பேச கற்றுக் கொள்ளுங்கள்.67வருட அரசியல் உரிமைக்கு தீர்வுகா
னது இழுத்துஅடித்துவிட்டு மேலும்,மேலும் காலத்தை வீனாக்குவது வாழபோகும் மக்களுக்கு மேலும் சுமையாக அமைந்துவிடும்.ஆகவே புதியவர்களை அரசியலுக்கு உள்வாங்குவதும் சமூகவிரோதிகள்,கொலையாளிகள்,நிதிமோசடிக்காறர்,விபச்சாரபேர்வழிகள் இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களை அரசியல்வாதிகளாக வைப்பது மிகவும் வரவேற்கத்
தக்கது.
மு.குறிப்பு:-
1)யுத்த காலத்தில் இயற்கைமரணம் எய்திய(இறந்தவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை)
நபர்களும் துப்பாக்கி சூடுபட்டு இறந்தாக இழப்பீட்டு தொகை எடுத்தவர்கள் பற்றியது
பற்றியும் நாம் விவாதிக்கவேண்டும்.
2)தமிழ் மக்களின் பூரண குடிசனதொகையை கணக்கெடுத்து வெளிநடுகளில் வாழ்பவர்கள்
பொலியான பெயர்கழில் வாழ்பவர்களின் பெயர்களை உறுதிப்படுத்துவதினாலும் இனப்படு
கொலையின் இறப்பு விகிதத்தை குறைக்கமுடிம் எப்படிப் பார்த்தாலும் தமிழ் தலமை தமிழ்
மக்களை ஏமாற்றிகின்றார்கள் என்பது உறுதியான விஷயம்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுமில்லை பாதுகாப்பாகவாழ்வதர்க்கான
வாழ்விடமுமில்லை.
தமிழ் தேசியத்தையும்,இயக்கத் தலைவர்களையும் புதிய அரசின் உதவியுடன் தண்டிப்பதும் அரசியலிலிருந்து விலக்கவதுமே சரியானதும் ஆரோக்கியமான தமிழ் மக்களின் தீர்வாகும்.
பின் குறிப்பு;._ஏ.கே 47 துப்பாக்கி வந்தாப்பிறகுதான் ஏகாதிபத்தியப் போராட்டம் வீழ்சிபெற்றது
அதன் பின்பே ஏகாதிபத்தியம் இராசயண ஆயுதம் கொத்துகுண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதமேன பூச்சாண்டி பிரசாரத்தில் இறங்கியது. யானை தனக்குத் தானே மண் அள்ளி
கொட்டுவதுபொல தன் அழிவை நொக்கியே நகர்கின்றது ஏகாதிபத்தியம்.
தொடரும்.
ஜோசப் மகேந்திரன். 

Aucun commentaire:

Enregistrer un commentaire