mardi 31 mars 2015

டோக்கியோவில் உள்ள மாவட்டம் ஒன்று அங்கீகரித்திருக்கிறது இருபாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக ஒரு பாலின கூட்டுறவை

ஒருபாலின உறவை, இரு பாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக டோக்கியோவில் உள்ள மாவட்டம் ஒன்று அங்கீகரித்திருக்கிறது. ஜப்பானிலேயே இதை முதல் முறையாக அங்கீகரித்திருப்பது இந்த நகராட்சிதான்.
ஒருபாலின திருணத்திற்கு எதிரான கண்ணோட்டம் ஜப்பானிய சமூகத்தில் உள்ளது
ஒருபாலின திருணத்திற்கு எதிரான கண்ணோட்டம் ஜப்பானிய சமூகத்தில் உள்ளது
டோக்யோவின் ஷிபூயா வார்டைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள், இருபாலின ஜோடிகளின் திருமணத்திற்கு இணையாக ஒரு பாலின கூட்டுறவை அங்கீகரிக்கும் சிறப்பு சான்றிதழ் தருவதற்கு, ஒப்புதல் அளிக்கும் அவசரச் சட்டதிற்கான வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்.
இந்த சான்றிதழ்களை சட்ட அங்கீகாரமாகக் கருத முடியாது என்றாலும் கூட, இருபாலின திருமணம் செய்து கொள்வோருக்கு உள்ள உரிமைகள் இந்த ஒருபாலின கூட்டுறவுக்கும் உண்டு என்பதை அது உறுதிசெய்யும்.
டோக்யோவின் மற்ற பகுதிகளும் இதை பின்பற்றதொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜப்பானின் சமூக அமைப்பின் அடித்தளத்திற்கு இந்த முடிவு பெரும் அச்சுறுதலாக அமையும் என்று கருதும் இருக்கிறது. ஜப்பானிய அரசிடமிருந்து இந்த நடவடிக்கைக்கு பலமான எதிர்ப்பு வரும் என்று தெரிவதாக டோக்யோவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire