mardi 31 mars 2015

மாடுகளை புகைப்படம் எடுக்க போலிஸ் உத்தரவு

மஹாராஷ்டிராவில் பசு மாட்டின் உரிமையாளர்கள் தமது மாட்டின் புகைப்படத்தை எடுத்து அதை அதிகாரிகளிடம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பசுப் பாதுகாப்பு இந்துத்துவ அரசியலின் முக்கிய அங்கமாக உள்ளது
பசு மாடு
பசு மாட்டு இறைச்சிக்கு மஹாராஷ்டிரா விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை அமல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என்று காவல்துறை கூறுகிறது.
பசு மாட்டை புனிதமாகக் கருதும் இந்துத்துவ கட்சிகளான பாரதீய ஜனதாவும், சிவசேனையும் இணைந்த கூட்டணி அரசு சில வாரங்களுக்கு முன்பு பசு மாட்டிறைச்சிக்கு ஒட்டு மொத்தத் தடை விதித்தது.
பசு மாட்டை படம் பிடித்து வைத்துக்கொள்வதன் மூலம், பசுமாடு சட்டவிரோதமாகக் கொல்லப்படுகிறதா என்பதை கண்டறிய உதவும் என்று மலேகான் நகர காவல்துறை கூறியுள்ளது.
இந்தத் தடையானது சிறுபான்மையினருக்கும், மாட்டிறைச்சியை உணவாகக் கொண்ட தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரானது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire