samedi 7 mars 2015

மட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலாலயத்தினரின் தேவாஞ்சலி நிகழ்வு

சித்திரசேனா கலாலயத்தினரின் தேவாஞ்சலி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கெயார் சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பெரும்பான்மையினத்த மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்துள்ள சடங்களைக்கொண்டதான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த நாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
கலை இயக்குனர் ஹேஷ்மா விக்னராஜாவின் நெறியாள்கையின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவான கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வினை பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் வழிநடாத்தியதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire