mardi 17 mars 2015

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவிடம் வாக்குமூலம்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர்.
இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட தனுன, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தான் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில், ஆயுதக் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டதாக கூறப்படும் மோசடி தொடர்பில், தனுன திலகரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire