samedi 31 janvier 2015

அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்

ஆணுகுண்டை ஏந்தி ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்தவகை ஏவுகணை மூன்றாவது முறையாக இன்று சோதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதன்முறையாக சாலையில் செல்லும் கனரக வாகனத்தில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையைக் கொண்டு சீனாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் இலக்கு வைக்க முடியும். நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் அது ஐரோப்பாவை அடையும்.
இந்த சோதனை வெற்றிபெற்றுள்ளதை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாகனத்தில் இருந்து ஏவப்படும் நீண்டதூரம் செல்லும் ஏவுகணை நாட்டின் பாதுகாப்புக்கு கிடைத்த முக்கிய ஆயுதம் என்று வர்ணித்துள்ளார்.
அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானியான அவினாஷ் சந்தர், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சனிக்கிழமையன்று ஒய்வு பெறும் நிலையில் இந்த சோதனை வந்துள்ளது.
அவினாஷ் சந்தரின் பதவிக் காலத்தை காரணம் ஏதும் கூறாமல் மோடி அரசு சில வாரங்களுக்கு முன்னர் குறைத்தமை குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire