dimanche 11 janvier 2015

சிறிலங்க சுதந்தந்திர கட்சியின் பிரதித்தலைவர் கருணா  சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார் 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு 10 டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழக் கூட்டத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்வதில் ஆட்சேபம் கிடையாது என கருணா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவராக நியமிப்பது குறித்த யோசனைத் திட்டமொன்று சற்று முன்னர் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கருணாவின் ஆதரவினை மைத்திரிபால ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
ஏனெனில், தலாதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாகவும் கருணாவை தண்டிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்தில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தரப்பினர் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது 

Aucun commentaire:

Enregistrer un commentaire