samedi 3 janvier 2015

மீண்டும் புதிய தலமையை நோக்கி

எம்சமூகத்தில் தோன்றிய விடுதலை அமைப்புகளில் முற்போக்கு அரசியலை தனது கொள்கையாக கொண்டு மாபெரும் மக்கள் சக்தியை ஓண்றினைத்து புரட்சிய முன்னெடுத்த PLOTE அமைப்பானது. தனது முற்போக்கு கொள்கையில் இருந்து வழிதறிக்கொள்ளும்போது. கொள்கையில் பற்றுக்கொண்ட பல முற்போக்கு சக்திகள் தொடர்ச்சியாக வெளியேறிக் கொள்கிறார்கள். இன்நிலமையானது இறுதியில் மிகவும் படுமோசமான பிற்போக்காளர்கள் தலமை தாங்கும் நிலமையை உருவாக்கியது. 

 புரட்சி சிந்தனையாளர்ககளும் பிற்போக்காளர்களிற்கும்  ஏற்பட்ட பிரிவுகள் PLOTE அமைப்பை அழிவு நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. புலிகள் மேற்கொண்டு வந்த படுகொலையில் இருந்து தம்மை தற்காத்து கொள்வதகூறிக்கொண்டு 1990 இல் இருந்து இலங்கை இராணுவத்தினருடன் கூலிப்படையாக இயங்கி வந்தது இன்றைய PLOTE இன் தலைமை. புலிகளின் படுகொலைகளில் இருந்து தம் உயிரை பாதுகாத்து கொள்ள இவர்களின் கட்டுபாட்டு பிரதேசத்திற்கு வந்த பல தோழர்களை தவறான செயல்பாடுளிற்கு பயன்படுத்தி கொண்டது இச் சித்தாத்தன் கும்பல்.
இலங்கை அரசும் அதன் படைகளும் எம்மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைகளிற்கு எதிராக விசாரணைவேண்டும் என ஊழையிடும் எம்மத்தியில் உள்ள அரசியல் பிழைப்புகள். எமது மக்களின் விடுதலைக்காக போராடுவதாக ஆயுதமேந்தி  தங்களின் ஆதிக்கததை நிலைநாட்ட. புலிகள் உள்பட அனைத்து இயக்கங்களும் எம்மில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை பலியெடுத்தார்கள். இவர்களையெல்லாம் எந்த மக்கள் நீதிமன்றம் விசாரணைக்கு உள்படுத்தியது. மக்களை பாதுகாக்க வேண்டியவர்களே கொடும் கொலைகாறர்களாக இருக்கும் போது. எம் எதிரியிடம் மட்டும் விசாரணை கோருகின்றார்கள். எம் சமூகத்தின் மீது குற்றம் செய்தஅனைவரும் தண்டனைக்கு உள்படத்த படவேண்டும். 

இவ்வாறான ஆதாரங்களின் அடிப்படையில். வவுனியா பிரதேசத்தில் கொலை. கடத்தல். கொள்ளை போன்ற பெரும்பாலன குற்றசெயல்களிற்கு இப்பிதேசத்தில் துணைப்படையாக செயல்பட்டு வந்தத சித்தாத்தன் கும்பலே இவற்றையெல்லாம் நிறைவேற்றியவர்கள்.  இவர்களை போன்றவர்களை அரசியலில் இருந்து அப்புறபடுத்துவது மட்மல்லாது. புரட்சி கொள்கைக்காக புறப்பட் அமைப்பை கொலை கொள்ளை குழுவாக மாற்றி வழிநடத்திக்கொண்டிருக்கும்  இக்கும்பல் வெகுவிரைவில் வெளியேற்றப்படுவார் என்பதை அனைவரிற்கும் தெரியப்படுத்துகிறோம்.

 ஒரு சில நாட்களிற்கு முன்னர் வெளியான அறிக்கைகள் நன்றாக தெழிவுபடுத்துகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக கட்டியமைக்கப்பட்ட PLOTE அமைப்பை. அதன் நோக்கத்திற்கா போராடிய காலத்தைவிட.  இலங்கை அரசிற்கு காட்டி கொடுப்பு சேவையை நீண்டகாலமாக செய்து சாதனை படைதது  இச்சித்தாத்தன் தலமையிலான குழு. தேர்தல் மூலம் ஒருசில ஆசணங்களை பெற்றுக்கொள்ள TNA எனும் அடிவருடி கும்பலுடன் இணைந்ததில் இருந்து. தங்ளை புனிதமானவர்கள் என சமூகத்திற்கு காட்டிகொள்ள பிராயசித்தம் செய்துவரும் நேரத்தில்.  இக்குழுவில் இதிலிருந்து நழுவிய ஒருசில ஒட்டுண்ணிகள் இலங்கை அரசுடன் இணைந்து இயங்கபோவதாக அறிக்கைகள் விட்டதை அடுத்து. அவர்கள் என்னுடன் இருக்கவில்லை என்ற புரளியான அறிக்கையை வெளியிட்டார். அவர்களை  அரசகூலிகளாக வழத்தெடுத்ததே இந்த சித்தாத்தன் செய்த மாபெரும் காட்டிகெடுப்பு   புரட்சி. 

ஜனாதிபதி தேர்தலில் யாரிற்கு தமது ஆதரவுகளை வழங்குவதெற்ற பேரத்தில் TNA கூட்டுக் கொள்ளையர்கள். பல கோடிகளை பெற்றுக்கொண்டுMaithripala Sirisena  விற்கு ஆதரவழிப்பதாக அறிக்கை விட்டுள்ளார்கள். இதேபோன்று அன்று புலிகள் 300 கோடிரூபாவை மஹிந்தாவிடம் பெற்றுக்கொண்டு. பணத்திற்கான அடிமைத்தனத்தை புலிகள் அன்று வட-கிழக்கில் செய்து மஹிந்தாவை ஆட்சியில் அமர்த்தினார்கள். சிலஆண்டுகளின் பின்னர் அதே மஹிந்தாவே பல ஆயிரக்கணக்கன அப்பாவிமக்களையும் பலியெடுத்து புலிகளிற்கு நந்திகடலில் கொள்ளிவைத்தது அஞ்சலிசெலுத்தினார்.  
 மகிந்தாவின் அரசியலை ஒருங்கிணைந்து நிறைவேற்றியவர்தான் இந்த  Maithripala Sirisena. இவரிடம் பணம் மட்டும்மின்றி சிலமந்திரி பதவிகளை பெறுவதற்கான உத்தரவாதங்களையும் இந்த TNA பச்சோந்திகள் பெற்றுக்கொண்டுள்ள து.   

இவர்ளைப் போன்ற சமூக குற்றவாழிகள் எம்சமூகத்தின் பிரதிநிதிகளாக தொடர்வதில் இருந்து கழையெடுக்க புறப்படடுள்ள எமக்கு. முற்போக்கு சிந்தனைஉள்ள அனைத்து தோழர்களின் ஒத்துழைப்பை கோருகின்றோம். 


தோழர்கள்
PLOTE

Aucun commentaire:

Enregistrer un commentaire