mercredi 28 janvier 2015

அணுஉலைகளையும்,ஆயுதங்களையும், சோலார்ளையும் இந்தியாவிடம் விற்க வந்துள்ள, ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,பின்வருமாறு கூறினார்."நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன.

அன்றுமுதல் இன்று வரை, நமது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர்களை,நாம் ஒருபோதும் அழைத்ததில்லை.பெருந்தலைவரின் வாக்கை மீறி அமெரிக்க அதிபர்களை குடியரசு விழாவிற்கு,இதுவரை எந்தப் பிரதமரும் அழைக்கத் துணிந்ததில்லை.

பிரதமராக பதவி ஏற்கும் விழாவிற்கு,மோடி யாரும் எதிர்பாராத வகையில், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவை அழைத்து கொஞ்சிக் குலாவினார்.
இப்பொழுது,ஆயுத வியாபாரியான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை,குடியரசு விழாவிற்கு அழைத்துள்ளது,ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அமெரிக்க சோலார் பேனல்களையும்,அணுஉலைகளையும்,ஆயுதங்களையும்,இந்தியாவிடம் விற்க வந்துள்ள, ஒபாமாவை,குடியரசு தின விழாவிற்கு மோடி அழைத்து வந்துள்ளது,நமதுதேசத்தையே சிறுமைப்படுத்தி விட்டது.

இந்தச் சோதனையான நிகழ்வை தாண்டி,இந்திய மக்கள், அமெரிக்கப் பொருட்களைப் இனி புறக்கணிப்பார்கள் என நம்புகிறேன்.நம் ஜனநாயக மாண்புகளை மீட்டெடுக்க,அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க உறுதி பூணுவோம்.

குடியரசு தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்

வழக்கறிஞர் திலகர்

Aucun commentaire:

Enregistrer un commentaire