mercredi 14 janvier 2015

என்னைத் தமிழா் அழிக்கவில்லையடா!!கோபதாண்டவம்

2015- என்னைத் தமிழனோ, முஸ்லீமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்ட என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயாவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச.
 தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்தராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.

தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும் சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மிகி்ந்த கத்தியுள்ளார். ”என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள்” என கோத்தபாயா தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.

”எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி நான் என்ன செய்வது ” என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்தராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire