mercredi 21 janvier 2015

பீர் குடித்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு, மது வீட்டிற்கு நாட்டிற்கு கேடு, இவைஅனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..அமெரிக்காவில் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையில் ஹர்வர்டு மருத்துவ கல்லூரி குழுவினர் பீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்  பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம், தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். இந்த பரிசோதனை முயற்சி தொடர்பாக அவர்களிடம் கடந்த 1987 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் 2011-ம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire