mercredi 21 janvier 2015

இலங்கையர் அகதிகளாக வாழக் கூடாது உலகின் எந்த மூலையில் இருந்தாளும் நாடு திரும்புங்கள்

இந்தியாவிலுள்ள அகதிகள் தாயகம் திரும்புங்கள்’
Mangala-Samaraweera“இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக் கூடாது. எனவே மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பி வாருங்கள்” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவில் வேண்டு கோள் விடுத்தார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோளை விடுத்தார். ‘சகல இன மக்களினதும் வாக்குகளுடன் உண்மையான அரசாங்கம் இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், உலகின் எந்தவொரு பகுதியிலும் இலங்கையர்கள் அகதிகளாக இருக்கக் கூடாது. தயவு செய்து தாய்நாட்டிற்கு வாருங்கள்.

உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காக திறந்த மனதுடன் நாம் நேசக்கரம் நீட்டுகின்றோம்’ என்றும் அமைச்சர் சமரவீர கூறினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி. வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தவால், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் ஆகியோரையம் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை இலங்கை வருமாறு அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த அழைப்பினை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதேநேரம், இச்சந்தர்ப்பத்தில் இரு வெளிவிவகார அமைச்சுக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்கால இந்திய விஜயம் குறித்தும் ஆராய்ந்தனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் 27 வருடங் களுக்குப் பிறகு இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி விளங்குவாரென எதிர்பார்க்கப் படுகிறது.

அமைச்சர் மங்கள சமரவீர, வெளி விவகார அமைச்சின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தும் நோக்கிலேயே நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் அமைந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire