mercredi 7 octobre 2015

சட்டங்களை மதிக்காத இளைஞர்கள் சட்டங்களை இறுக்காத அரசு

கடமை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்  வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த இளைஞரான சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும் வெட்டுக்காயங்களுடன் நேற்று மாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மோட்டார் சைக்களில் வந்த ஆறு பேர், மிகவும் துணிச்சலான முறையில் கோப்பாய் சந்திக்கு அண்மையாக உரும்பிராய் வீதியில் வைத்து பொதுமக்கள் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire