samedi 31 octobre 2015

தீவிரமாக உழைத்து வந்த பெண்ணொருவர் ஜனாதிபதியாக நேபாளில்

நேபாளில் முதல் தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதியாக இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கொம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் சார்பில் பித்யா பந்தாரி (வயது 54) அவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தென்னாசியா பெண்களை அரசியல் தலைவர்களாகவும், நாட்டுத் தலைவராகவும் உருவாக்கிய அரசியல் மரபைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் தென்னாசியாவில் பெண்களை நாட்டின் தலைவியாக தெரிவு செய்த வரலாறுண்டு.

துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொருமுறையும் அரசியல் தலைவராக இருந்த ஆண் எவரேனும் மரணித்ததால் அவருக்கு பதிலாக அவரின் மகளோ, மனைவியோ தெரிவு செய்யப்படுகின்ற வரலாறே தொடர்ந்துள்ளது. அது இன்று நேபாளிலும் நேர்ந்துள்ளது.

ஆனால் நேபாளில் 1993 இல் கார் விபத்தில் கொல்லப்பட்ட அரசியல் தலைவரான மதன் பந்தாரியின் மரணத்தைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபாடுகொள்ளத் தொடங்கியவர் பித்யா பந்தாரி. ஆகவே ஏனைய பெண் அரசியல் தலைவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

குறிப்பாக பெண்ணுரிமை, சமத்துவம், ஜனநாயகம், அரசியல் சீர்திருத்தம் போன்ற விடயங்களில் தீவிரமாக உழைத்து வந்தவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire