samedi 31 octobre 2015

ஏழு மணி நேரம் காத்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ கடும்பில் விசனம்

xSpeechஏழு மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த போதிலும் விசா­ரணை எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடும் விசனம் வெளி­யிட்­டுள்ளார்.
பாரிய நிதி மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் எதிரில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.
சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் அவர் நேற்று முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி ஆணைக்­குழு காரி­யா­ல­யத்­திற்கு சென்­றி­ருந்தார்.
எனினும், ஏழு மணித்­தி­யா­லங்கள் அங்கு காத்­தி­ருந்த போதிலும் வாக்கு மூலம் எதுவும் பதி­யப்­ப­ட­வில்லை என அவர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
நானும் எனது சட்­டத்­த­ர­ணி­களும் முழு நாளும் இங்கு காத்­தி­ருந்தோம்.
எனதும் எனது சட்­டத்­த­ர­ணி­க­ளி­னதம் கால நேரம் விர­ய­மா­கி­யது.
இது மிகப் பெரிய உள­வியல் பாதிப்­பாகும். தொடர்ச்­சி­யாக இவ்­வா­று­செய்­வது என்­னிடம் பழி­வாங்கும் நோக்­கி­லாகும்.
வெறு­மனே எனது காலத்தை விர­ய­மாக்­கு­கின்­றனர்.
இப்­போது இவர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யாக இருக்கும். நான் செய்த கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­படவில்லை. என்­னுடன் எவ்­வித கொடுக்கல் வாங்­கல்­களும் கிடை­யாது.
எனினும் நான் தொடர்ச்­சி­யாக ஆணைக்­குழு எதிரில் பிர­சன்­ன­மா­கின்றேன். பிரச்­சனை என்­ன­வென்றால் எனது கால நேரம் விர­ய­மா­கின்­றது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire