mardi 6 octobre 2015

மத கருத்து தெரிவிப்பவர் மீதும் வழக்கு பதிவு.மத உணர்வுகளை தூண்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை:


மத உணர்வுகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாட்டு இறைச்சி சாப்பிடுவதாக
ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டில் அண்மைக்காலங்களில் மதக்கலவரங்கள் அதிகரித்து வருவதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம், மதக்கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பொறுமை காக்க வேண்டாம் என்றும், மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைக்கும் எந்த செயலையும் அனுமதிக்கக் கூடாது.மத ரீதியாக நடக்கும் வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுங்கள். மத தீவிரவாதம் எந்த வகையில் வந்தா லும் அதை ஒடுக்க வேண்டும். நாட்டின் மத ஒற்றுமைக்கு எதிராக மத உணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், கருத்து கள் பரப்பப்பட்டா லும் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத வன்முறையாளர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும். இதில், எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது ....
மாட்டுக்கறி பற்றிய கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.முதல்-மந்திரி லாலு பிரசாத் கூறுகையில், 'இந்துக்களும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்' என்றார் .மக்கள் இனி மதங்களை நம்பி பயன் இல்லை என்று மனித வழ விழக்கங்களை அனைத்து மீடியாக்களும் பேஸ்புக் போன்ற தனியார் இனைய தளங்களை. பகுத்தறிவாழிகளும் புத்தியீவிகளும் கேட்டுக்கொள்கின்றார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire