jeudi 12 septembre 2013

சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்த்தேன் இல்லை .கொழும்பு பொரளை தெகுதியில் இருக்கின்றது

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் பொரளை தேர்தல் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றார். இவருக்கு அராலி பாலத்திற்கருகிலுள்ள வான் பகுதியில் எத்தனை வான் கதவுகள் இருக்கின்றது என்று தெரியுமா?யாழ்ப்பாணத்தில் எத்தனை தீவுகள் இருக்கின்றது என்று தெரியுமா? என பொது அறிவு வினாடிவினா கேள்விகளை எழுப்பியுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. நேற்று யாழ்.நகரில்; நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுகையி லேயே அவர் மேற்படி கேள்விளை எழுப்பியுள்ளார்.குறித்த சந்திப்பில் மேலம் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற கூட்டத்தில் கேட்ட தமிழ் தசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம்; மாகாணசபை தேர்தலில் அந்த மாகாணத்துடன் தொடர்பல்லாதவர் போட்டியிட முடியாது என நாம் கேட்டால் கதி என்ன?கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த மாவட்டத்தில் வாக் காளராக இருக்கின்றார் என அறிய ஆவலடைந்து யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்த்தேன் அங்கே இல்லை.வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பார்த்தேன் அங்கும் இல்லை. நான் அதிர்ந்துபோ னேன் சிலவேளை இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாக்காளர் பதிவு அவருக்கு இல் லையோ என்று. பின்னர் கொழும்பு மாவட்டத்தினை பார்த்தபோது பொரளை தேர்தல் தெ குதியில் அவருடய பெயர் இருக்கின்றது. இவரே வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளர். என புன்னகையுடன் கூறினார்

Aucun commentaire:

Enregistrer un commentaire